தி.மலையில் கதர் சிறப்பு விற்பனை : அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார்

தி.மலையில் கதர் சிறப்பு விற்பனையை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார். அருகில், ஆட்சியர் பா.முருகேஷ் உள்ளிட்டோர்.
தி.மலையில் கதர் சிறப்பு விற்பனையை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார். அருகில், ஆட்சியர் பா.முருகேஷ் உள்ளிட்டோர்.
Updated on
1 min read

மகாத்மா காந்தி பிறந்தநாளை யொட்டி கதர் சிறப்பு விற்பனை தொடக்க விழா திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

ஆட்சியர் பா.முருகேஷ் தலைமை வகித்தார். கதர் கிராமத் தொழில்கள் உதவி இயக்குநர் சீனுவாசன் வரவேற்றார். சிறப்பு கதர் விற்பனையை பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார். சேலை, வேட்டி, துண்டு, போர்வை, தேன், சாம்பிராணி, சந்தன மாலை, ஜவ்வாது பவுடர் மற்றும் காதி கிராப்ட் தயாரிப்பு சோப்பு வகைகள் ஆகியவை விற்பனை செய்யப்படுகிறது. திருவண் ணாமலை மாவட்டத்தில் கதர் விற்பனையின் இலக்கு ரூ.82.11 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதில், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துகுமாரசாமி, உதவி ஆட்சியர் (பயிற்சி) கட்டா ரவி தேஜா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in