Published : 30 Sep 2021 07:47 AM
Last Updated : 30 Sep 2021 07:47 AM

குழந்தை விற்பனை: 6 பேர் மீது வழக்கு :

தூத்துக்குடி

விருதுநகர் மாவட்டம் அருப்புக் கோட்டையைச் சேர்ந்தவர் மணிகண்டன்(38). இவருக்கும், தூத்துக்குடி கொத்தனார் காலனியைச்சேர்ந்த ஜெபமலர்(28) என்பவருக்கும் கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. கடந்த8 மாதங்களுக்கு முன்பு ஜெபமலருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி பிரிந்து வாழ்ந்துள்ளனர்.

இந்நிலையில், மணிகண்டன் சமீபத்தில் ஜெபமலர் வசித்த வீட்டுக்கு வந்துள்ளார். அங்கு குழந்தையை காணவில்லை. குழந்தை விற்கப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து மணிகண்டன் தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், ஜெபமலர், தனது குழந்தையை ஜேசுதாஸ் என்பவர் மூலம் அந்தோணி, கிருபா, செல்வராஜ், டேனியல் ஆகியோருடன் சேர்ந்து ரூ.3 லட்சத்துக்கு விற்பனை செய்து விட்டதாகவும், குழந்தையை மீட்டுத்தர வேண்டும், எனவும் கூறியிருந்தார். போலீஸார் விசாரணை நடத்தி குழந்தையின் தாய் ஜெபமலர் உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x