Published : 26 Sep 2021 03:26 AM
Last Updated : 26 Sep 2021 03:26 AM
சேலம் மாவட்டம் ஓமலூரில் 16 வயது சிறுமியை கட்டாய திருமணம் செய்த கூலித் தொழிலாளியை போக்சோ சட்டத்தில் போலீஸார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி சரவணன் (28). இவர் அதே பகுதியில் பாட்டி வீட்டுக்கு வந்திருந்த 16 வயது சிறுமியை கட்டாய திருமணம் செய்துள்ளார். இதில் சிறுமி கர்ப்பமடைந்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த சைல்டு லைன் அமைப்பினர் சிறுமியை மீட்டு, சேலம் சின்னதிருப்பதியில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர். ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், சிறுமி அளித்த புகாரின்பேரில், கட்டாய திருமணம் செய்த சரவணனை, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, ஆத்தூர் கிளைச் சிறையில் அடைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT