தஞ்சாவூரைச் சேர்ந்தவர் முருகன் மனைவி மாரியம்மாள். இவர் புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூரில் சாலையோர உண வகம் நடத்தி வருகிறார். நேற்று இங்கு வந்திருந்த இவரது மகன் பிரகதீஸ்வரன்(13), அப்பகுதியில் உள்ள பெரிய குளத்தில் குளித்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்தார். கீரனூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.