Published : 26 Sep 2021 03:27 AM
Last Updated : 26 Sep 2021 03:27 AM

தென்காசி மாவட்டத்தில் இன்று - 411 மையங்களில் கரோனா தடுப்பூசி முகாம் :

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் பள்ளிகள் என, 411 மையங்களில் இன்று (26-ம் தேதி) கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. முகாமுக்கு வரும் மக்கள் தங்களது ஆதார் எண், தொலைபேசி எண்ணை வழங்க வேண்டும். இந்த முகாம்கள் காலை 7 மணி முதல் நடைபெறும்.

சுகாதாரத் துறை, உள்ளாட்சி அமைப்பைச் சேர்ந்த பணியாளர்கள், கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் தடுப்பூசி செலுத்த வேண்டிய நபர்களுக்கு பிரத்யேகமான முறையில் டோக்கன் வழங்கப்பட்டு, தடுப்பூசியின் அவசியம் குறித்து எடுத்துரைக்கப்பட்டு, முகாம்களுக்கு வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உள்ளாட்சி அமைப்பினர் மூலம் முகாம்களில் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் வசதி, நிழல் பந்தல்கள் அமைக்கப்படும். பொதுமக்கள் முகாம்களில் கலந்துகொண்டு, தடுப்பூசி செலுத்தி கரோனா தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என, தென்காசி மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தரராஜ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x