Published : 26 Sep 2021 03:27 AM
Last Updated : 26 Sep 2021 03:27 AM

3 சிறுவர்களை பாதுகாப்பாக ஒப்படைத்த - அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநரை காவல் துறையினர் கவுரவிப்பு :

செய்யாறு அருகே அரசுப் பேருந்தில் தனியாக பயணித்த 1 சிறுவர் மற்றும் 2 சிறுமிகளை மீட்டு காவல்நிலையத்தில் ஒப்படைத்த ஓட்டுநர் மற்றும் நடத்துரை காவல்துறையினர் கவுரவித்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் இருந்து சென்னைக்கு அரசுப் பேருந்து கடந்த 22-ம் தேதி சென்றுள்ளது. அப்போது, அந்த பேருந்தில் 11 வயது மாணவர், 9 வயது உள்ள 2 மாணவிகள் தனியாக பயணித்துள்ளனர். இதையறிந்த அரசுப் பேருந்து ஓட்டுநர் முரளி மற்றும் நடத்துநர் தங்கராஜ் ஆகியோர் தூசி காவல் நிலையத்துக்கு பேருந்துடன் சென்று, காவல்துறையிடம் 3 சிறுவர்களையும் ஒப்படைத்தனர்.

இதையடுத்து, சிறுவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி, பின்னர் பெற்றோரை வரவழைத்து அவர்களை ஒப் படைத்தனர். இந்நிலையில், 3 சிறுவர்களை பாதுகாப்பாக மீட்டு ஒப்படைத்த ஓட்டுநர் முரளி மற்றும் நடத்துநர் தங்கராஜ் ஆகியோரை தூசி காவல் நிலையத்துக்கு வரவழைத்து, அவர்களுக்கு உதவி ஆய்வாளர் சிலம்பரசன் சால்வை அணிவித்து பாராட்டினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x