காவேரிப்பட்டணம் அருகே குளிர்பானம் தயாரிக்கும் நிறுவனத்தில் ஆய்வு :

காவேரிப்பட்டணம் அருகே குளிர்பானம் தயாரிக்கும் நிறுவனத்தில் ஆய்வு :
Updated on
1 min read

திருவள்ளூர் அருகே கடையில் குளிர்பானம் குடித்த 2 பேர் நேற்று முன்தினம் மயங்கி விழுந்தனர். அவர்களை அருகிலிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்த நிலையில், குளிர்பானம் தயாரிக்கும் இடம் கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த சப்பானிப்பட்டி என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து கிருஷ்ணகிரி ஆட்சியர் உத்தரவுப்படி கிருஷ்ணகிரி மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர் வெங்கடேஷ் தலைமையில் நாகேந்திரன், சுரேஷ் உள்ளிட்ட அலுவலர்கள் ஆலையில் தயாரிக்கப்படும் 3 வகையான குளிர்பான பாட்டில்களையும் சென்னை, கிண்டியில் உள்ள அரசு பகுப்பாய்வகத்திற்கு சோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறும்போது, குளிர்பானங்கள் பகுப்பாய்விற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முடிவுகள் வரும் வரை குளிர்பான ஆலையில் உற்பத்திக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது, என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in