Published : 21 Sep 2021 03:20 AM
Last Updated : 21 Sep 2021 03:20 AM

கிருஷ்ணகிரி அரசு மகளிர் கல்லூரியில்மாணவியர் சேர்க்கைக்கு கலந்தாய்வு : நாளை, நாளைமறுநாள் நடக்கிறது

கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக்கல்லூரியில் முதலாமாண்டு இளங்கலை மற்றும் முதுகலை பாடப்பிரிவுகளில் மாணவியர் சேர்க்கைக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெறுகிறது.

இதுதொடர்பாக கல்லூரி முதல்வர் கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் 2021-22-ம் கல்வியாண்டில் இளங்கலை மற்றும் முதுகலை முதலாமாண்டு மாணவியர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

சேர்க்கைக்கு ஒரு சில இடங்கள் காலியாக உள்ளதால் நாளை (22-ம் தேதி) இளங்கலை மாணவியர்களுக்கும், வரும் 23-ம் தேதி முதுகலை பாடப்பிரிவுக்கு இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெறவுள்ளது. இணையதளம் மூலம் விண்ணப்பித்த மாணவியர்கள் மற்றும் கல்லூரியில் நேரடியாக விண்ணப்பித்த மாணவியர்கள் கலந்தாய்வில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

மேலும், இளங்கலை பாடப்பிரிவில் சேர நடைபெறும் கலந்தாய்வுக்கு வரும் மாணவியர்கள் 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 அசல் மதிப்பெண் பட்டியல், முதுகலைபாடப்பிரிவுக்கு விண்ணப்பித்த மாணவியர்கள், பாடப்பிரிவின் அசல் மதிப்பெண் பட்டியல்கள் மற்றும் சாதிச் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ், அண்மையில் எடுக்கப்பட்ட 3 புகைப்படம் ஆகியவற்றை கட்டாயம் எடுத்து வர வேண்டும் என்று தெரிவித் துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x