Published : 19 Sep 2021 03:15 AM
Last Updated : 19 Sep 2021 03:15 AM

ஆரோக்கிய விழிப்புணர்வு மினி மாரத்தான் :

சிவகங்கை அருகே இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்புப் படை பயிற்சி வீரர்கள் பங்கேற்ற ஆரோக்கிய விழிப்புணர்வு மினி மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.

இலுப்பைக்குடியில் இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு பயிற்சி மையம் உள்ளது.

நேற்று இம்மையத்தில் மத்திய அரசின் ஆரோக்கியா இந்தியா இயக்கம் என்ற திட்டத்தின் சார்பில் மினி மாரத்தான் ஓட்டம் நடந்தது. இதில் பயிற்சி மைய வீரர்கள், பொதுமக்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

மினி மாரத்தானை பயிற்சி மைய டிஐஜி ரன்வீர்சிங் தொடங்கிவைத்தார். துணை கமாண்டர் துர்கேஷ், உதவி கமாண்டர்கள் ரகுகுமார், ரவி பிரகாஷ் உள்ளிட்டோர் பங் கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x