பூவந்தி அருகே கிரானைட் கல் சரிந்து தொழிலாளி உயிரிழப்பு :

பூவந்தி அருகே கிரானைட் கல்  சரிந்து தொழிலாளி உயிரிழப்பு :
Updated on
1 min read

பூவந்தி பகுதியில் உள்ள தனியார் கிரானைட் நிறுவனத்தில் அப்பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணகுமார்(40), மலைச்சாமி(45) ஆகியோர் வேலை பார்த்து வந்தனர். இவர்கள் கிரானைட் கற்களை நேற்று முன்தினம் மாலை வாகனத்தில் ஏற்றினர். அப்போது கற்கள் சரிந்து விழுந்ததில், இருவரும் பலத்த காயமடைந்தனர்.

இவர்கள் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி கிருஷ்ணகுமார் நேற்று உயிரிழந்தார்.

இதையடுத்து கிரானைட் நிறுவன உரிமையாளர் சுரேஷ் அகர்வால், மேலாளர் முருகானந்தம் ஆகியோர் மீது பூவந்தி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in