Published : 19 Sep 2021 03:16 AM
Last Updated : 19 Sep 2021 03:16 AM

பள்ளி அருகே - ஆபத்தான நிலையில் மின்கம்பம் :

திருச்சி திருவெறும்பூர் அருகே பள்ளிக்கு அருகில் இரண்டாக உடைந்து ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பத்தை உடனடியாக மாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவெறும்பூர்- கல்லணை சாலையில் வேங்கூர் கிராமத்தில் தனியார் சிபிஎஸ்இ பள்ளி உள்ளது. பிரதான சாலையிலிருந்து பள்ளிக்குச் செல்லும் குறுக்குச் சாலையில் உள்ள காலியிடத்தை 3 தினங்களுக்கு முன்னர் பொக்லைன் கொண்டு சுத்தம் செய்துள்ளனர். அப்போது அந்த பொக்லைன் இடித்ததில் மின்கம்பத்தின் அடிப்பகுதி இரண்டாக உடைந்தது. இதனால், மெதுவாக மின்கம்பம் சாலை நோக்கி சாய்ந்து கொண்டே வந்தது. இதையடுத்து அப்பகுதி மக்கள் ஒரு ஏணியை வைத்து உடைந்த மின் கம்பத்துக்கு முட்டுக் கொடுத்து வைத்துள்ளனர்.

இந்த வழியாகத் தான் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் சென்று வருகின்றனர். இதன் காரணமாக மாணவ, மாணவிகளை ஏற்றி வந்த பள்ளிப் பேருந்துகள் இந்த வழியாக செல்ல முடியவில்லை.

ஆபத்தான நிலையில் உள்ள இந்த மின்கம்பத்தை உடனடியாக மாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x