Published : 19 Sep 2021 03:16 AM
Last Updated : 19 Sep 2021 03:16 AM

குண்டர் சட்டத்தில் மருத்துவர் கைது :

திருச்சி

12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குழந்தைகள் நல மருத்துவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

திருச்சி கே.கே.நகரைச் சேர்ந்தவர் ரமேஷ். குழந்தைகள் நல மருத்துவரான இவர், 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கன்டோன்மென்ட் அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர், போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து கடந்த ஆக.13-ம் தேதி கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

விசாரணையில், தொடர்ந்து பாலியல் குற்றம் செய்யும் எண்ணம் உள்ளவர் என தெரிந்ததால் அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து காவல் ஆணையர் அருண் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x