திருச்சியில் குற்றச் செயல்கள் அதிகரிப்பதால் - ரவுடிகளைப் பிடிக்க தேடுதல் வேட்டை :

திருச்சியில் குற்றச் செயல்கள் அதிகரிப்பதால் -  ரவுடிகளைப் பிடிக்க தேடுதல் வேட்டை :
Updated on
1 min read

திருச்சியில் குற்றச்செயல்கள் அதிகரிப்பதால் ரவுடிகள், பழைய குற்றவாளிகளைப் பிடிக்க மாநகர போலீஸார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

திருச்சி மாநகரில் கடந்த சில நாட்களாக ரவுடிகள் குற்றச் செயல்களில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது.

கடந்த வாரம் மரக்கடை பகுதியில் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில், இரு தினங்களுக்கு முன் பொன்மலைப்பட்டியில் சாலையில் பொதுமக்களுக்கு மத்தியில் இளைஞர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இச்செயலில் ஈடுபட்ட நபர்கள் இளம் வயதினர் என்பதுடன், அவர்கள் ஏற்கெனவே குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து மாநகரில் சட்டம், ஒழுங்கை நிலைநிறுத்தும் வகையில் இங்கு தலைமறைவாக உள்ள ரவுடிகள், பழைய குற்றவாளிகள், ரவுடிகளுடன் தொடர்புடைய நபர்களைப் பிடித்து விசாரணை நடத்துமாறு போலீஸாருக்கு காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.

அதன்தொடர்ச்சியாக நேற்று காலையிலிருந்து இரவு வரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் போலீஸார் நடத்திய சோதனையில் 50-க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளனர். அவர்களிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in