Published : 18 Sep 2021 03:12 AM
Last Updated : 18 Sep 2021 03:12 AM

சேலம் மாவட்டத்தில் 27-ம் தேதி : குடற்புழு நீக்க சிறப்பு முகாம் :

பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் தேசிய குடற்புழு நீக்க வார விழா வரும் 20-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, வரும் 27-ம் தேதி சிறப்பு முகாம் நடக்கிறது.

இதுதொடர்பாக சேலம் ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தேசிய குடற்புழு நீக்க வாரம் வரும் 20-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. குழந்தைகளுக்கான குடற்புழு நீக்கும் சிறப்பு முகாம் 27-ம் தேதி நடைபெறவுள்ளது. முகாமில் 1 முதல் 19 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் குடற்புழு நீக்க மாத்திரை (அல்பெண்ட்சோல்) இலவசமாக வழங்கப்படுகிறது.

மேலும், முகாமில் 20 முதல் 30 வயதுடைய பெண்களுக்கு (கருவுற்ற மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் தவிர) இலவசமாக அல்பெண்டசோல் மாத்திரை வழங்க திட்டமிட்டுள்ளது.

முகாம் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் நடைபெறும். மேலும் அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகளில் தேவைக்கேற்ப நடைபெறும். இத்திட்டத்தின் மூலம் சேலம் மாவட்டத்தில் 1 முதல் 19 வயதுடைய குழந்தைகள் 11,11,084 பேரும், 20 முதல் 30 வயதுடைய பெண்கள் 2,24,827 பேரும் பயனடைய உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x