ஊராட்சி நிர்வாகத்தினர் உண்ணாவிரதம் :

ஊராட்சி நிர்வாகத்தினர் உண்ணாவிரதம் :

Published on

அலுவலர்களைக் கண்டித்து புதுக்கோட்டை மாவட்டம் வல்லத்திராகோட்டை ஊராட்சி நிர்வாகத்தினர் நேற்று உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் வல்லத்திராகோட்டை ஊராட்சியில் சாலை, தெருவிளக்கு, குடிநீர், குப்பையை அகற்றும் வாகனம் வழங்க கோருதல் போன்ற கோரிக்கைகள் குறித்து பல முறை மனு அளித்தும் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், இது குறித்து ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தும் தீர்வு ஏற்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

இதைக் கண்டித்து ஊராட்சி மன்றத் தலைவர் கன்சல் பேகம், துணைத் தலைவர் ஆறுமுகம் மற்றும் உறுப்பினர்கள் வல்லத்திராகோட்டை பேருந்து நிறுத்தம் அருகே வாயில் கருப்பு துணியைக் கட்டிக்கொண்டு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு நடவடிக்கை எடுப்ப தாக ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் மற்றும் போலீஸார் சமாதானம் செய்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in