கடலூர் அரசு கலைக் கல்லூரியில் - 22-ம் தேதி முதுநிலை சேர்க்கை கலந்தாய்வு :

கடலூர் அரசு கலைக் கல்லூரியில் -  22-ம் தேதி முதுநிலை சேர்க்கை கலந்தாய்வு :
Updated on
1 min read

கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் முதுநிலை மாணவர் சேர்க்கை கலந்தாய்வு வரும் 22-ம் தேதி தொடங்கி நடைபெறுகிறது. அன்றைய தினம் முதுகலை அறிவியல் பாடங்களுக்கான கலந்தாய்வும், 23-ம் தேதி முதுகலை, வணிகவியல் மற் றும் மொழிப்பாடங்களுக்கான கலந்தாய்வும் நடைபெறுகிறது.முத லாம் கட்ட கலந்தாய்வின் முடிவில் அனைத்துப் பாடப்பிரிவுகளிலும் காலியாக இருக்கும் இடங்களுக்கு இரண்டாம் கட்டக் கலந்தாய்வு வரும் 27-ம் தேதி நடைபெறுகிறது.

தமிழக அரசு அனைத்துப் பாடப்பிரிவுகளிலும் 25 சதவீதம்வரையிலான கூடுதல் இடங்க ளுக்கு அனுமதி வழங்கியுள்ளது. அதனடிப்படையில், கூடுதல் இடங்களுக்கான கலந்தாய்வு முதுகலை அறிவியல் பாடங்களுக்கு வரும் அக்டோபர் 6-ம்தேதியன்றும், முதுகலை, வணிகவியல் மற்றும் மொழிப்பாடங் களுக்கு அக்டோபர் 7-ம் தேதி யன்றும் நடைபெறுகிறது.

முதுநிலை மாணவர்கள் சேர்க் கைக்கான கலந்தாய்வு குறித்த விவரங்கள் விண்ணப்பித்த மாணவர்கள் அனைவருக்கும் குறுஞ் செய்தி மற்றும் தொலைபேசி வாயிலாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை கல்லூரியின் முதல்வர் (பொறுப்பு) முனைவர் கே.பழனிவேலு தெரிவித்துள்ளார்.

அனைத்துப் பாடப் பிரிவுகளிலும் 25 சதவீதம் கூடுதல் இடங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in