வீடுகளில் ஊட்டச்சத்து தோட்டம் தொடங்க அரசு உதவி :

வீடுகளில் ஊட்டச்சத்து தோட்டம் தொடங்க அரசு உதவி :
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி மாவட்டம் இந்திலிஊராட்சியில் தேசிய ஊட்டச்சத்து வார விழாவையொட்டி, ரத்த சோகை ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குடும்பங்களுக்கு ஊட்டச் சத்து தோட்டம் அமைக்க தேவையான விதைகள் மற்றும் நாற்றுகளை மாவட்ட ஆட்சியர் பி.என்.தர் வழங்கினார்.

மேலும் விதைகள் மற்றும் நாற்றுகள் வளர்ப்பு குறித்த பராமரிப்பு சிற்றேட்டினை பயனா ளிகளுக்கு வழங்கினார்.

இரத்த சோகை குறைபாடு உள்ளவர்கள், வளர்ச்சி குன்றியவர்கள், ஊட்டச்சத்து குறைபாடுகள் உள்ளவர் களை கண்டறிந்து, அவர்களின் குடும்ப புறக்கடைகளில் ஊட்டச் சத்து தோட்டம் அமைத்து சரிவிகித உணவு உட்கொள்ள பயிற்சி பெற்ற சமுதாய வள பயிற்றுநர்கள் மூலம் விழிப்புணர்வு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in