Published : 17 Sep 2021 03:12 AM
Last Updated : 17 Sep 2021 03:12 AM
மதுரை நகர சாலைகளில் திரியும் மாடுகள் வாகனங்கள் மோதி காயம் அடைவதும், வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்குவதும் அதிகரித்து வருகிறது.
மதுரை மாநகராட்சி பகுதியில் உள்ள சாலைகள் அனைத்தும் மிகக் குறுகலாக உள்ளன. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. மேலும் மதுரை வைகை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் அதிக அளவு மாடுகளை வளர்க்கின்றனர். இவற்றை மேய்ச்சலுக்காக அவிழ்த்து விடுகின்றனர். அவை சாலைகளில் சுற்றித் திரிவதால் வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகின்றன. இதில் மாடுகளும், வாகனங்களில் பயணம் செய்பவர்களும் படுகாயம் அடைகின்றனர்.
சில ஆண்டுகளுக்கு முன் மாநகராட்சியும், போலீஸாரும் இணைந்து சாலைகளில் கால்நடைகளை அவிழ்த்துவிட்டால் அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கும் நடைமுறையை அமல்படுத்தினர். அதனால் சாலைகளில் மாடுகள் திரிவது ஓரளவு குறைந்தது.
கரோனாவால் அனைவர் கவனமும் நோயை கட்டுப்படுத்துவதிலேயே இருந்ததால் தற்போது மாடுகள் மீண்டும் சாலைகளில் திரிய ஆரம்பித்துள்ளன. மதுரை கே.கே.நகரில் 5-க்கும் மேற்பட்ட மாடுகள் நேற்று மாலை சாலையில் சென்றன. அப்போது அந்த வழியாக வந்த மாநகராட்சி குடிநீர் லாரி ஒரு மாடு மீது மோதியது. இச்சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ஆனால் பசுமாடு படுகாயமடைந்தது. அதை அப்பகுதி வழக்கறிஞர்கள் 5-க்கும் மேற்பட்டோர் மீட்டு கால்நடை மருத்துவர்கள் உதவியோடு சிகிச்சை அளித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT