Published : 17 Sep 2021 03:12 AM
Last Updated : 17 Sep 2021 03:12 AM

குப்பைகளை தரம் பிரித்து வாங்க உத்தரவு - காரைக்குடியில் தூய்மை பணியாளர்கள் போராட்டம் :

காரைக்குடி

குப்பைகளைத் தரம் பிரித்து வாங்குமாறு உத்தரவிட்டதால் காரைக்குடி நகராட்சியைக் கண்டித்து தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காரைக்குடி நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் தினமும் 300 டன் வரை குப்பை சேகரமாகிறது. தூய்மைப் பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று குப்பைகளைச் சேகரித்து அந்தந்தத் தெருக்களில் உள்ள குப்பை சேகரிப்புத் தொட்டிகளில் கொட்டி வைத்தனர். பிறகு அவற்றை மொத்தமாக வாகனத்தில் எடுத்துச் சென்று கிடங்கில் கொட்டி வந்தனர்.

நேற்று குப்பைகளைத் தரம் பிரித்து வாங்கி நேரடியாக உரமாக்கும் பிரிவுக்கே கொண்டு வர வேண்டுமென நகராட்சி அதிகாரிகள் உத்தரவிட்டனர். மேலும் தெருக்களில் உள்ள குப்பை சேகரிப்புத் தொட்டிகளில் யாரும் குப்பைகளைக் கொட்ட முடியாதபடி கவிழ்த்து வைத்தனர்.

ஆனால் நகர மக்கள் குப்பை களைத் தரம் பிரிக்காமலேயே தூய்மைப் பணியாளர்களிடம் கொடுத்தனர். குப்பை சேகரிப்புத் தொட்டிகளைக் கவிழ்த்து வைத்ததால் குப்பைகளைத் தூய்மைப் பணியாளர்களால் கொட்ட முடியவில்லை. மேலும் குப்பைகள் தரம் பிரிக்காமல் வாங்கப்பட்டதால் நகராட்சி தரம் பிரிக்கும் இடத்திலும் வாங்க மறுத் துவிட்டனர்.

இதையடுத்து குப்பை வாகனங்களோடு தூய்மைப் பணியாளர்கள் நகராட்சி அலு வலகம் முன் போராட்டத்தில் ஈடுப ட்டனர். அதிகாரிகள் சமரசத்தை அடுத்து கலைந்து சென்றனர்.

இதுகுறித்து நகராட்சி ஆணையர் சுதா கூறியதாவது:

குப்பைகளை தரம் பிரிக்காமல் வாங்கி மொத்தமாகக் கொட் டியதால் மலை போல் தேங்கிக் கிடக்கிறது. அவற்றை அப்புறப் படுத்தி வருகிறோம்.

தரம் பிரித்து குப்பைகளை வாங்குமாறு 2 மாதங்களுக்கு முன்பே உத்தரவிட்டோம். ஆனாலும் பழையபடி தரம் பிரிக் காமலேயே குப்பைகளை வாங்கி வருகின்றனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x