Published : 17 Sep 2021 03:12 AM
Last Updated : 17 Sep 2021 03:12 AM
ஆம்பூர் வட்டாட்சியர் அலுவல கத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (ஸ்மார்ட் கார்டு) வழங்கும் முகாம் ஆம்பூர்வட்டத்துக்குட்பட்ட வங்கி தொடர்பாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் தங்கையா பாண்டியன் தலைமை வகித்தார். இதில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் திட்ட அலுவலர் பாலாஜி, தனி வட்டாட்சியர் சம்பத் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் முதியோர் உதவித்தொகை, அரசு உதவித்தொகை வழங்கும் வங்கி தொடர்பாளர்கள் 24 பேர் பங்கேற்றனர்.
இதில் மாற்றுத்திறனாளி களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்குவது குறித்தும் அவர்களுக்கான உதவித் தொகையை வீடு, வீடாக சென்று வழங்க வேண்டும்.
மாற்றுத்திறனா ளிகளிடம் கனிவாக பேசி, அவர்களின் முழு விவரங்களை சேகரிக்க வேண்டும். கரோனா தடுப்பூசி போடாவிட்டால் அங்கேயே அவர்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என மாவட்ட வருவாய் அலுவலர் தங்கைய்யாபாண்டியன் அறிவுறுத்தினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT