Published : 17 Sep 2021 03:12 AM
Last Updated : 17 Sep 2021 03:12 AM
ஆம்பூர் நகர காவல் நிலையத்தை நகை அடகு கடை வியாபாரிகள் நேற்று முற்றுகையிட்டு போராட் டத்தில் ஈடுபட்டனர்.
ஆம்பூர் ஷராப் பஜார் பகுதியில் உள்ள ஒரு நகை அடகு கடையில் திருட்டு நகை அடமானம் வைக்கப்பட்டது தொடர்பாக ஆம்பூர் நகர காவல் துறையினர் சம்பந்தப்பட்ட நகை அடகு கடைக்கு நேற்று சென்று அங்கு கடை உரிமையாளரிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது கடையின் உரிமை யாளரை காவல் துறையினர் தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து நகை அடகு கடை வியாபாரிகள் காவல் நிலையம் முன்பாக ஒன்று திரண்டனர்.
பிறகு காவல் துறையினரின் செயலை கண்டித்து ஷராப் பஜார் பகுதியில் அமைந்துள்ள அனைத்து அடகு கடைகள், நகை கடைகளை அடைத்து விட்டு நேற்று திடீரென முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து ஆம்பூர் நகர காவல் ஆய்வாளர் திருமால் பேச்சுவார்த்தை நடத்தி யதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT