Published : 06 Sep 2021 03:16 AM
Last Updated : 06 Sep 2021 03:16 AM

நாமக்கல் அரசு கல்லூரியில் கரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி :

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் இளையோர் செஞ்சிலுவை சங்கம் சார்பில் கரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் பெ.முருகன் தலைமை வகித்தார்.

வளையப்பட்டி அரசு ஆரம்பசுகாதார நிலைய மருத்துவர் பிரியங்கா மாணவ, மாணவியரிடையே சமூக இடைவெளி, தடுப்பூசி போடுதல் மற்றும் முகக் கவசம் அணிவதன் அவசியம் குறித்து விளக்கிப் பேசினார்.

மேலும், மாணவ, மாணவியர் சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டதுடன் கைகளை கழுவும் முறை குறித்து செயல்விளக்கமும் செய்து காண்பிக்கப்பட்டது. விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.

நிகழ்ச்சியில், செஞ்சுருள் சங்க திட்ட அலுவலர்கள் சந்திரசேகரன், வெஸ்லி கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x