Published : 06 Sep 2021 03:17 AM
Last Updated : 06 Sep 2021 03:17 AM

நெல்லை, தென்காசியில் 21 பேருக்கு கரோனா :

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் நேற்று 10 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதன் மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27 ஆயிரத்து 129 ஆக உள்ளது. நேற்று 7 பேர் குணமடைந்தனர். இதுவரை 26 ஆயிரத்து 534 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 111 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேபோல் திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று 11 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது. கரோனாவால் பாதிக்கப் பட்டோர் மொத்த எண்ணிக்கை 48 ஆயிரத்து 505 ஆக அதிகரித்துள்ளது. நேற்று 9 பேர் குணமடைந்தனர். இதுவரை 47 ஆயிரத்து 935 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 140 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x