தி.மலை மாவட்டம் கடலாடி அரசு மேல்நிலை பள்ளி - ஆசிரியர், அவரது குடும்பத்தினர் : 6 பேருக்கு கரோனா தொற்று : பள்ளியை மூட பரிந்துரைக்க சுகாதார துறை முடிவு

தி.மலை மாவட்டம் கடலாடி அரசு மேல்நிலை பள்ளி  -  ஆசிரியர், அவரது குடும்பத்தினர் : 6 பேருக்கு கரோனா தொற்று  :  பள்ளியை மூட பரிந்துரைக்க சுகாதார துறை முடிவு
Updated on
1 min read

கடலாடி அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் மற்றும் அவரது குடும்பத்தினர் 5 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத் தில் கடந்த 1-ம் தேதி முதல் அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் இயங்கி வருகின்றன. கரோனா தொற்று பரவல் தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி வகுப்புகள் நடைபெறுகிறது.

அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் தொடங்கப்பட்ட முதல் மூன்று நாட்களுக்கு அறிகுறி மற்றும் பாதிப்பு ஆகிய காரணங்களால், சுமார் 50-க்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில், கலசப்பாக்கம் அடுத்த கடலாடி அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது நேற்று முன் தினம் உறுதியானது. இதையடுத்து அந்த ஆசிரியர், திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், ஆசிரியர் சென்று வந்த வகுப்பறை, கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து மூடப்பட்டு 'சீல்' வைக்கப்பட்டது. மேலும், பள்ளி முழுவதும் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யப்பட்டுள்ளது.

50 பேருக்கு கரோனா பரிசோதனை

இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநர் மருத்துவர் செல்வகுமாரிடம் கேட்டபோது, “ஆசிரியருக்கு கரோனா தொற்று இருப்பது கடந்த 4-ம் தேதி உறுதியானது.

இதையடுத்து, அவரது குடும்பத்தில் உள்ளவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதில், ஆசிரியரின் மனைவி, 3 வயது மகள், 8 மாத ஆண் குழந்தை மற்றும் 2 பேர் என மொத்தம் 5 பேருக்கு கரோனா தொற்று இருப்பது இன்று(நேற்று) உறுதியானது. அவர்கள் அனைவருக்கும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக...

அதனடிப்படையில் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு கருதி பள்ளியை மூட பரிந்துரைக் கப்படும்” என தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in