போக்சோ சட்டத்தில் கைதாகி - போலீஸ் விசாரணையில் இருந்த ஓட்டுநர் உயிரிழப்பு : நாமக்கல்லில் பரபரப்பு

போக்சோ சட்டத்தில் கைதாகி -  போலீஸ் விசாரணையில் இருந்த ஓட்டுநர் உயிரிழப்பு :  நாமக்கல்லில் பரபரப்பு
Updated on
1 min read

போக்சோ சட்டத்தின் கீழ் கைதாகி பரமத்தி வேலூர் காவல் நிலையத்தில் விசாரணையில் இருந்த லாரி ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பரமத்தி வேலூர் அருகே பாண்டமங்கலம் சேவல்கட்டு மூளை பகுதியைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் மணிகண்டன் (43). பாலியல் புகார் தொடர்பாக மணிகண்டனை பரமத்தி வேலூர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அவர் மயக்கமடைந்துள்ளார்.

உடனடியாக பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர், மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். எனினும், மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தார்.

இதுதொடர்பாக நாமக்கல் முதலாவது குற்றவியல் நீதிமன்ற நடுவர் நேரில் விசாரணை நடத்தினார். நாமக்கல் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவல் துறையினர் விசாரணையின்போது விசாரணைக் கைதி இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in