Published : 04 Sep 2021 03:14 AM
Last Updated : 04 Sep 2021 03:14 AM

சேந்தமங்கலத்தில் : 10 பவுன் நகை திருட்டு :

நாமக்கல்

சேந்தமங்கலத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகைகளைத் திருடிச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் சேந்த மங்கலம் மேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் சந்திரசேகரன். நேற்று முன்தினம் இவர் தூங்கிக் கொண்டு இருந்தபோது, உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், அருகில் இருந்த அறையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து, பீரோவில் இருந்த 10 பவுன் நகையைத் திருடிச் சென்றனர்.

சந்திரசேகரன் காலையில் எழுந்து பார்த்தபோது, திருட்டு குறித்து தெரியவந்தது. புகாரின்பேரில் சேந்தமங்கலம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x