Published : 04 Sep 2021 03:16 AM
Last Updated : 04 Sep 2021 03:16 AM

கிராம நிர்வாக அலுவலர்போக்சோ சட்டத்தில் கைது :

நாமக்கல்லில் பாலியல் புகாரின்பேரில் கிராம நிர்வாக அலுவலர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம் குமாரமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் ஜீவானந்தம் (45). இவரது உறவினர்களான இரு பெண்கள், ஜீவானந்தம் தங்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக திருச்செங்கோடு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

ஆய்வாளர் ஹேமாவதி தலைமையிலான போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து புகாருக்கான ஆதாரங்கள் இருந்ததையடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸார், கிராம நிர்வாக அலுவலர் ஜீவானந்தத்தை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x