Published : 01 Sep 2021 03:18 AM
Last Updated : 01 Sep 2021 03:18 AM

பிச்சைக்காரர் கொலையில் இளைஞர் கைது :

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி முத்தரையர் நகரைச் சேர்ந்தவர் சண்முகராஜ் (55). மீனவரான இவர் கடந்த சில ஆண்டுகளாக தொழிலுக்குச் செல்லாமல் ஏர்வாடி தர்ஹா பகுதியில் பிச்சை எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 29-ம் தேதி ஏர்வாடி தர்ஹாவில் இலவச உணவு வழங்கும் இடத்தில் சண்முகராஜூக்கும், ஏர்வாடி சேர்மன் தெருவைச் சேர்ந்த அஜீத்குமார் என்ற சாகுல்ஹமீது (21) என்பவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது சாகுல்ஹமீது, சண்முகராஜை எட்டி உதைத்துள்ளார். அங்கிருந்து சென்ற சண்முகராஜ் வாந்தி எடுத்துள்ளார். அதன்பின் அன்றையதினம் இரவில் தூங்கியவர், நேற்று முன்தினம் காலையில் எழுந்திருக்கவில்லை. அருகில் இருந்தவர்கள் சென்று பார்த்தபோது, அவர் இறந்து கிடந்தார். சாகுல்ஹமீது மீது ஏர்வாடி தர்ஹா போலீஸார் வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x