போக்ஸோவில் இளைஞர் கைது :

போக்ஸோவில் இளைஞர் கைது :
Updated on
1 min read

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக திருவண்ணா மலையைச் சேர்ந்த இளைஞர் போக்ஸோ சட்டத்தின் கீழ் நேற்று கைது செய்யப்பட்டார்.

திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் சரவணன் மகன் விக்ரம்(22). கூலித் தொழிலாளி. இவர், திருவண்ணாமலையிலிருந்து அடிக்கடி தஞ்சாவூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, 9-ம் வகுப்பு படிக்கும் சிறுமியை காதலிப்பதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில், சிறுமி கர்ப்பமடைந்தார்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் தஞ்சாவூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், இன்ஸ் பெக்டர் சந்திரா வழக்குப் பதிவு செய்து விக்ரமை நேற்று கைது செய்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in