தூத்துக்குடி மாவட்டத்தில் மது விற்ற 10 பேர் கைது :

தூத்துக்குடி மாவட்டத்தில் மது விற்ற 10 பேர் கைது :
Updated on
1 min read

சட்ட விரோதமாக மது விற்பனை செய்வதை தடுக்க தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் போலீஸார் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். அப்போது, சாத்தான்குளம் காந்திநகர் பகுதியில் மதுவிற்பனை செய்த அதே ஊர் அம்மன் கோயில்தெருவைச் சேர்ந்த ராஜேஷ் (30)என்பவரை கைது செய்து, 115 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் தூத்துக்குடி தென்பாகம், வடபாகம், மாசார்பட்டி, எட்டயபுரம், தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மற்றும் கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்க பிரிவு ஆகிய 6 காவல் நிலையப் பகுதிகளில் மது விற்பனை செய்த 9 பேரை போலீஸார் கைது செய்து, 26 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in