குடிநீர் கோரி கீரனூரில் மறியல் :

குடிநீர் கோரி கீரனூரில் மறியல் :
Updated on
1 min read

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பேரூராட்சி புஷ்பம் நகரில்மாதத்துக்கு 2 முறையே குடிநீர் விநியோகிக்கப்படுவதாகவும், இதுதொடர்பாக பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

இதைக் கண்டித்தும், தினசரி குடிநீர் விநியோகிக்க வேண்டும் என வலியுறுத்தியும் கீரனூர் பேருந்து நிலையம் அருகே காலிக்குடங்களுடன் பெண்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நடவடிக்கை எடுப்பதாக கீரனூர் போலீஸார் சமாதானம் செய்து, போராட்டத்தில் ஈடுபட்டோரை அனுப்பி வைத்தனர். சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in