Published : 27 Aug 2021 03:13 AM
Last Updated : 27 Aug 2021 03:13 AM

சைக்கிளில் பிரச்சாரம் மேற்கொள்ளும் - ஹரியாணா விவசாயி பெரம்பலூர் வருகை :

ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜெஹர்சிங்(40). விவசாயியான இவர், விவசாயிகளின் எதிர்காலத்தைக் காப்பாற்ற வலியுறுத்தி காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சைக்கிள் பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிட்டார். அதன்படி, ஆக.1-ம் தேதி தனது சைக்கிள் பிரச்சாரத்தை காஷ்மீரில் அவர் தொடங்கினார்.

பல்வேறு மாநிலங்களைக் கடந்து நேற்று பெரம்பலூருக்கு வந்தார். அவருக்கு கரம்கொடு மனிதா அறக்கட்டளை சார்பில், அதன் நிறுவனர் பிரபாத் கலாம் தலைமையில் பெரம்பலூரில் வரவேற்பளிக்கப்பட்டது.

தொடர்ந்து, பெரம்பலூரில் பிரச்சாரம் மேற்கொண்ட ஜெஹர்சிங், பின்னர் திருச்சிக்கு புறப்பட்டுச் சென்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x