Published : 24 Aug 2021 03:15 AM
Last Updated : 24 Aug 2021 03:15 AM

ஓட்டுநர், நடத்துநர்களுக்கு தனி நல வாரியம் கோரி மனு :

பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு தனி நல வாரியம் அமைக்கக்கோரி தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் அமைப்பு சாரா நலச் சங்கத்தினர் நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள விவரம்:

தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் அமைப்பு சாரா நலச்சங்கம் செயல்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா தொற்று பரவல் காரணமாக ஏராளமான ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் வேலை இழந்துள்ளனர்.

எனவே, இத்தொழிலை காப்பாற்றிட அனைத்து பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கும் நிவாரணத்தொகை அளிக்க வேண்டும். அனைத்து தொழில்களுக்கும் நலவாரியம் அமைக்கப்பட்டுள்ளதுபோல், அனைத்து வாகன ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கென தனி நலவாரியம் அமைத்து அதன் மூலம் பல்வேறு சலுகைகள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x