Published : 22 Aug 2021 03:14 AM
Last Updated : 22 Aug 2021 03:14 AM

எடை குறைந்த 6 குழந்தைகளுக்கு சிகிச்சை : சிவகங்கை அரசு மருத்துவர்களுக்கு பாராட்டு :

சிவகங்கை அரசு மருத்துவமனையில் எடை குறைந்த 6 குழந்தைகளுக்கு சிறப்பான சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு பாராட்டு தெரிவித்த பெற்றோர்.

சிவகங்கை: சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2019-ம் ஆண்டு செப்.4-ம் தேதி பரமக்குடி அருகே தினைக்குளத்தைச் சேர்ந்த சித்திரவேல் மனைவி பொன்ராக்குவுக்கு ஒரே பிரசவத்தில் 2 பெண் குழந்தைகள் உட்பட 3 குழந்தைகள் பிறந்தன. இக்குழந்தைகள் எடை குறைவாக 1.5 கிலோவுக்கு கீழே இருந்தன.

2019 செப்.15-ம் தேதி சிவகங்கை மாவட்டம் வேதியரேந்தலைச் சேர்ந்த தினேஷ் மனைவி கோமதிக்கு ஒரே பிரசவத்தில் 2 பெண் குழந்தைகள் உட்பட 3 குழந்தைகள் பிறந்தன. இக்குழந்தைகளும் எடை குறைவாக 1.35 கிலோவுக்கு கீழே இருந்தன. இந்த 6 குழந்தைகளுக்கும் சிவகங்கை அரசு மருத்துவமனையில் 2 மாதங்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அந்த 6 குழந்தைகளும் நலமாக உள்ளனர்.

இதையடுத்து மருத்துவக் கல்லூரி டீன் ரேவதி, மருத்துவமனை கண்காணிப்பாளர் பாலமுருகன், குழந்தை நலப் பிரிவுத் துறைத் தலைவர் குணா, நிலைய மருத்துவ அலுவலர் ரபீக், உதவி அலுவலர்கள் மிதுன், செந்தில் மற்றும் மருத்துவர்களுக்கு இரு குடும்பத்தாரும் நேற்று நன்றி தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x