போக்ஸோவில் இளைஞர் கைது :

போக்ஸோவில் இளைஞர் கைது :
Updated on
1 min read

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே நெய்வேலி செட்டிக்கொல்லை பகுதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்(28). இவர், திருப்பூரில் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

அப்போது, அங்கு உடன் வேலை பார்த்த 16 வயது சிறுமியிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி, நெருங்கி பழகியதாகக் கூறப்படுகிறது. இதில், அந்தச் சிறுமி கர்ப்பமானதையடுத்து, அவரை திருமணம் செய்ய மறுத்து ராமகிருஷ்ணன் தலைமறைவாகிவிட்டார்.

இதுதொடர்பாக, சிறுமியின் பெற்றோர் பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீஸார், தலைமறைவாக இருந்த ராமகிருஷ்ணனை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in