Published : 22 Aug 2021 03:15 AM
Last Updated : 22 Aug 2021 03:15 AM

மின்னல் தாக்கியதில் : தந்தை, மகன் படுகாயம் :

சேத்துப்பட்டு அருகே மின்னல் தாக்கியதில் தந்தை, மகன் நேற்று படுகாயமடைந்தனர்.

தி.மலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த சித்தாத்துரை கிராமத்தில் வசிப்பவர் விவசாயி ரமேஷ்(36). இவரது மகன் சந்தோஷ்(13). இவர்கள் இருவரும், தாங்கள் வளர்த்து வரும் மாடுகளை, விவசாய நிலத்தில் மேய்ச்சலுக்காக நேற்று காலை அழைத்து சென்றுள்ளனர். அதே கிராமத்தில் உள்ள ஏரிக்கரை அருகே நடந்து சென்றபோது, இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. அப்போது, மின்னல் தாக்கியதில் ரமேஷ் மற்றும் சந்தோஷ் படுகாயமடைந்து மயங்கி விழுந்தனர்.

இதையறிந்த கிராம மக்கள், அவர்கள் இருவரையும் மீட்டு சேத்துப்பட்டில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து சேத்துப்பட்டு காவல் துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x