Published : 18 Aug 2021 03:15 AM
Last Updated : 18 Aug 2021 03:15 AM

சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் - 3 மரண தண்டனை பெற்றவருக்குமேலும் ஒரு வழக்கில் சிறை :

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டத்தில் பாலியல் பலாத்கார வழக்கில் 3 மரண தண்டனை பெற்றவருக்கு, மேலும் ஒரு வழக்கில் சிறை தண்டனை வழங்கி குற்றவியல் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே ஏம்பல் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து மகன் ராஜா என்ற சாமிவேல்(26). கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் இவருக்கு, 2020 டிச.29-ம் தேதி 3 மரண தண்டனை அளித்து புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதனிடையே, இந்த வழக்கு தொடர்பாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பரிசோதனைக்காக சேர்க்கப்பட்ட சாமிவேல், 2020 ஜூலை 16-ம் தேதி தலைமறைவாகிவிட்டார். பின்னர், போலீஸார் பிடித்து வந்தனர்.

இது குறித்து கணேஷ் நகர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் புதுக்கோட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில், 3 பிரிவுகளுக்கு மொத்தம் 7 மாதம் சிறை தண்டனை வழங்கி நீதிபதி எம்.அறிவு உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x