Published : 18 Aug 2021 03:15 AM
Last Updated : 18 Aug 2021 03:15 AM

18 பவுன் நகைகள், பணம் திருட்டு :

பெரம்பலூர் வடக்கு மாதவி ரோடு வெற்றிநகரில் வசித்து வருபவர் முகமது இலியாஸ்(33). இவரது மனைவிக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு குழந்தை பிறந்துள்ளதால் அதே பகுதியில் உள்ள அவரது தாய் வீட்டில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு தனது மனைவி, குழந்தையுடன், முகமது இலியாஸ் மாமனார் வீட்டில் தங்கிவிட்டு நேற்று காலை தனது வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 18 பவுன் நகைகள், ரூ.30 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடு போனது தெரியவந்தது.

இதுகுறித்த பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x