Published : 04 Aug 2021 03:22 AM
Last Updated : 04 Aug 2021 03:22 AM
காரைக்கால் மாவட்டம் மேலையூர் பாசனதாரர்கள் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று முன் தினம் நடைபெற்றது. சங்கத் தலைவர் எஸ்.கணபதி தலைமை வகித்தார். கூட்டத்தில் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக எஸ்.எம்.தமீம், செயலாளராக எஸ்.ராஜேந்திரன், துணைத் தலைவராக ஏ.சுப்பிரமணியன், பொருளாளராக பாலசுப்பிரமணியன், உறுப்பினர்களாக பி.சண்முகசுந்தரம், ஏ.ஜெயசீலன், ரட்சகநாதன், பி.சிவபிரகாசம் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கூட்டத்தில், மேலையூர் பகுதியில் வேளாண் விளைபொருட்களை உலர்த்த சிமென்ட் தளம் அமைக்கும் பணிக்கு ரூ.8 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. இந்தப் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும்.
படுதார்கொல்லை பகுதியில் சிற்றேரி வெட்டும் திட்டத்தின் கீழ் ஏரி வெட்டப்பட்டுள்ளது. எனினும் சுற்றியுள்ள நிலப்பகுதிகள், குடியிருப்புகள் பாதுகாப்புக்கு ஏற்ற வகையில் கரை அமைக்கப்படாமல் உள்ளது. இப்பிரச்சினை தொடர்பாக பொதுப்பணித்துறை நிர்வாகம் ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை ஆக.15-ம் தேதிக்குள் எடுக்காவிட்டால், பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும்.
திருமலைராயன்பட்டினம், மேலையூர் உள்ளிட்டப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் பயனடையும் வகையில், மானாம்பேட்டை திருமலைராஜனாற்று நீர்த்தேக்கத்திலிருந்து முறை வைக்காமல் தண்ணீர் திறந்துவிட பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT