Published : 04 Aug 2021 03:23 AM
Last Updated : 04 Aug 2021 03:23 AM

திருச்செந்தூர் முருகன் கோயிலில் - ஆக.8-ம் தேதி வரை பக்தர்களுக்கு தடை :

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் அறிக்கை: கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் ஆகிய கோயில்களில் ஆகஸ்ட் 1, 2, 3 மற்றும் 8-ம் தேதிகளில் பக்தர்கள் தரிசனம்செய்ய அனுமதி ரத்து செய்யப்பட்டது. அதேபோன்று கோவில்பட்டி பூவனநாதசுவாமி கோயிலில் முக்கிய விழாக்கள் நடைபெறக்கூடிய ஆகஸ்ட் 2, 3, 6, 8, 10 மற்றும் 13-ம் தேதி ஆகிய நாட்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி கிடையாது.

மேலும், ஆகஸ்ட் 4-ம் தேதி (இன்று) முதல் வரும் 8-ம் தேதி வரை அனைத்து நாட்களிலும் பொதுமக்கள் அதிகளவில் கூடுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரியவருவதால், கரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில், கோவில்பட்டி பூவனநாதசுவாமி கோயில் ஆகிய 3 கோயில்களிலும் இன்று (ஆக.4) முதல் 8-ம் தேதி வரை அனைத்து நாட்களும் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி இல்லை.

அதேநேரத்தில் கோயிலில் ஆகம விதிப்படி நடைபெறும் அனைத்து நிகழ்வுகளும் நடைபெறும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x