Published : 03 Aug 2021 03:16 AM
Last Updated : 03 Aug 2021 03:16 AM

காளையார்கோவில் அருகே குடிநீர் தட்டுப்பட்டால் கிராம மக்கள் தவிப்பு : வாரம் ஒருமுறை மட்டுமே தண்ணீர் விநியோகம்

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே வாரம் ஒருமுறை மட்டுமே காவிரி குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. குடிநீர் தட்டுப்பாட்டால் இக்கிராம மக்கள் சிரமப்படுகின்றனர்.

காளையார்கோவில் அருகே மாரந்தை ஊராட்சிக்குட்பட்ட கோலாந்தியில் 100 குடும்பங்கள் வசிக்கின்றன. அவர்களுக்கு காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதற்காக 3 இடங்களில் தெருக்குழாய்கள் அமைக்கப்பட் டுள்ளன.

வாரத்துக்கு ஒருமுறை குடிநீர் விநியோகிப்பதால், குடிநீர் வரும் சமயங்களில் பலமணி நேரம் காத்திருந்து கிராம மக்கள் தண்ணீர் பிடிக்கின்றனர். அதுவும் குடும்பத்துக்கு ஒரு குடம் தண்ணீரே கிடைக்கிறது. கூடுதல் தண்ணீர் தேவைக்கு பல கி.மீ. தூரம் சென்று தண்ணீர் எடுத்து வரு கின்றனர்.

இதுகுறித்து ஊராட்சித் தலைவர் திருவாசகம் கூறியதாவது: ஜல்சக்தி திட்டத்தில் ரூ.46 லட்சம் செலவில் 30 லட்சம் லிட்டர் கொள்ளளவு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியும், ஆழ்துளை கிணறும் அமைக்கப்பட்டுள்ளன. இவை விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளன. எனினும், இந்த ஆழ்துளை கிணறு மூலம் கிடைக்கும் நீர் உவர்ப்பாக இருக்கிறது. எனவே, தண்ணீரை சுத்திகரிப்பு செய்யும் இயந்திரத்தை நிறுவ அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x