Published : 03 Aug 2021 03:17 AM
Last Updated : 03 Aug 2021 03:17 AM

பேருந்தில் நகை பறித்த 3 பெண்கள் கைது :

புதியம்புத்தூர் கீழத்தெருவைச் சேர்ந்த ஆவுடையப்பன் மனைவி பாப்பா(55). இவரது மருமகள் மாரிச்செல்வி. இவர்கள் இருவரும் புதூர் பாண்டியாபுரம் சென்றுவிட்டு, அங்கிருந்து அரசு பேருந்தில் புதியம்புத்தூருக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது பாப்பா கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க நகையை காணவில்லை. அவர் சத்தம்போடவே பேருந்து நிறுத்தப்பட்டது.

பாப்பாவின் பின்னால் நின்றிருந்த 3 பெண்கள், பேருந்தில் இருந்து இறங்கி ஓடினர். மற்ற பயணிகள் அவர்களை மடக்கி பிடித்து புதியம்புத்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள் கோவில்பட்டி குருமலையைச் சேர்ந்த ராணி(30), ராதா(49), அபிராமி(27) என்பதும், பாப்பாவிடமிருந்து நகையை பறித்ததும் தெரியவந்தது. 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x