கடலூர் மாவட்டத்தில் 64 பேருக்கு கரோனா :

கடலூர் மாவட்டத்தில் 64 பேருக்கு கரோனா :
Updated on
1 min read

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 27 பேருக்குகரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் 43,878 பேருக்கு தொற்று ஏற்பட்டு, நேற்று 41பேர் உட்பட 43,139 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். தற்போது 398 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை 341பேர் உயிரிழந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று 51 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் 29,117 பேருக்கு தொற்று ஏற்பட்டு, நேற்று 61 பேர் உட்பட 28,428 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். தற்போது 491 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை 198 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் நேற்று 64 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் 60,514

பேருக்கு தொற்று ஏற்பட்டு,நேற்று 73 பேர் உட்பட 58,956 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். தற்போது 678 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று உயிரிழப்பு இல்லை.மாவட்டத்தில் இதுவரை 811 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in