சிவகங்கையை தவிர்க்கும் அரசு நரம்பியல் மருத்துவர்கள் : ஓராண்டாக பணியிடங்கள் காலி

சிவகங்கையை தவிர்க்கும் அரசு நரம்பியல் மருத்துவர்கள்  :  ஓராண்டாக பணியிடங்கள் காலி
Updated on
1 min read

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வர நரம்பியல், இரைப்பை குடலியல் மருத்துவர்கள் விரும்பாததால், அப்பணியிடங்கள் ஓராண்டாக காலியாக உள்ளன.

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நரம்பியல் தொடர்பான நோய் களுக்கு சிகிச்சை அளிக்க நரம்பியல் மருத்துவரும், குடல் புண் உள்ளிட்ட இரைப்பை தொடர்பான பிரச்சினைகளுக்கு சிகிச்சை அளிக்க இரைப்பை குடலியல் மருத்துவரும் நியமிக்கப்பட்டனர். ஆனால் ஓராண்டுக்கு முன்பு, நரம்பியல் மருத்துவர் மாறுதலில் மதுரை அரசு மருத்து வமனைக்கும், இரைப்பை குடலியல் மருத்துவர் தனியார் மருத்துவ மனைக்கும் சென்றுவிட்டனர்.

வேறு மருத்துவர்கள் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு வர விரும்பாததால் ஓராண்டாக 2 பணியிடங்களும் காலியாக உள்ளன. இதனால் நரம்பியலில் சிறு பிரச்சினைக்கு கூட மதுரை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யும் நிலை உள்ளது. உடனடியாக மருத்து வர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து மருத்துவமனை ஊழியர்கள் சிலர் கூறுகையில், ‘சிவகங்கை போன்ற பின்தங்கிய பகுதிகளுக்கு நரம்பியல், இரைப்பை, குடலியல் மருத்து வர்கள் வர விரும்புவதில்லை’ என்றனர்.

இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோது, ‘இப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in