Published : 02 Aug 2021 03:18 AM
Last Updated : 02 Aug 2021 03:18 AM

மனைவி தற்கொலை வழக்கில் கணவர் கைது :

வந்தவாசி: வந்தவாசி அருகே மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தி.மலை மாவட்டம் வந்தவாசி அடுத்த நல்லடிசேனை கிராமத்தில் வசிப்பவர் உஷால்(39). இவரது மனைவி சுமதி(36). திருமணமாகி 10 ஆண்டுகளாகிறது. குழந்தை இல்லாததால் தம்பதி இடையே கருத்து வேறுபாடு உள்ளது. இது தொடர்பாக 2 பேருக்கும் கடந்த மாதம் 30-ம் தேதி தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் மனமுடைந்த சுமதி, தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். தீக்காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுகுறித்து சுமதியின் தாயார் முத்துலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் தேசூர் காவல்துறையினர் தற்கொலைக்கு தூண்டிய பிரிவில் வழக்குப்பதிவு செய்து உஷாலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x