Published : 02 Aug 2021 03:18 AM
Last Updated : 02 Aug 2021 03:18 AM

தி.மலையில் நேற்று தொடங்கிய கரோனா 3-வது அலை தொடர்பான - விழிப்புணர்வு பிரச்சாரத்தில் காற்றில் பறந்த சமூக இடைவெளி : அரசு அதிகாரிகளும், அலுவலர்களும் அலட்சியம்

தி.மலையில் நேற்று மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தொடங்கி வைத்த கரோனா 3-வது அலை தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஒருவரையொருவர் இடித்துக் கொண்டு நிற்கும் அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள். படம்: இரா.தினேஷ்குமார்.

திருவண்ணாமலை

தி.மலையில் நேற்று தொடங்கி வைக்கப்பட்ட கரோனா 3-வது அலை தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தில் சமூக இடைவெளியை பின்பற்றா மல் ஒருவரையொருவர் இடித்துக் கொண்டு அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

தி.மலை மாவட்டத்தில் கரோனா 3-வது தொற்று பரவல் தடுப்புக்கான ஒரு வார விழிப்புணர்வு பிரச்சாரம் தி.மலை அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம் முன்பு நேற்று தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தலைமை வகித்து தொடங்கி வைத்து உறுதிமொழி ஏற்றார். பின்னர் அவர், விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தின் செயல் பாடுகளை பார்வையிட்டு, பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்தார். தொடர்ந்து, கலைக் குழுவினர் மூலம் வீதி, வீதியாக விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.

முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், அடிக்கடி கைகளை சுத்தம் செய்தல் மற்றும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுதல் ஆகியவற்றை வலியுறுத்தி ஒரு வாரத்துக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகிறது. ஆனால், திருவண்ணாமலையில் தொடங்கி வைக்கப்பட்ட விழிப்புணர்வு பிரச்சாரத்தில், ‘சமூக இடைவெளி’ என்பது காற்றில் பறந்தது.

சுகாதாரத் துறை அறிவித்துள்ள சமூக இடைவெளியை பொது மக்கள் பின்பற்றாமல் இருக்கும் நிலையில், முன் உதாரணமாக இருக்க வேண்டிய அரசுத் துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் ஆகியோர் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் அலட்சியமாக பங்கேற்றனர். ஒருவரையொருவர் இடித்துக் கொண்டு, காற்று கூட புகுந்து விட முடியாத அளவுக்கு நெருக்கமாக நின்றிருந்தனர்.

அதேபோல், விழாவில் பார்வை யாளர்களாக பங்கேற்ற பொது மக்களும், ஒருவரையொருவர் இடித்துக் கொண்டு வேடிக்கை பார்த்தனர்.

விழிப்புணர்வு பிரச்சாரமே, தொற்று பரவலுக்கு அடிகோடிட்டு விட்டது. இந்நிலை தொடர்ந்தால், 3-வது அலையின் தாக்குதலை விரைவில் எதிர்கொள்ள நேரிடும் என நோய் தடுப்பு விதிகளை பின்பற்றும் மக்கள் கூறுகின்றனர். மேலும் அவர்கள் கூறும்போது, “எதிர்காலத்தில் விழிப்புணர்வு பிரச்சாரத்தில், தொற்று பரவலை கட்டுப்படுத்த மத்திய- மாநில அரசுகள் விதித்துள்ள விதிகளை கடைபிடிக்கப்படுவதில் ஆட்சியர் பா.முருகேஷ் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x