585 விவசாயிகளுக்கு சான்று வழங்கல் :

585 விவசாயிகளுக்கு சான்று வழங்கல் :
Updated on
1 min read

திருப்பத்தூர் மாவட்டத்தில் அனைத்து குறுவட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகங்களில் சிறு,குறு விவசாயி சான்று பெறு வதற்கான சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது.

இம் முகாம்களில் கலந்து கொண்ட விவசாயிகள் 5 ஏக்கர் புன்செய் நிலம் அல்லது 2.5 ஏக்கர் நன்செய் நிலம் அதற்கான ஆவணங்களை சமர்ப்பித்த 4 வட்டங்களைச் சிறு, குறு சான்று வழங்கப்பட்டது. அதன்படி, திருப்பத்தூர் வட்டத்தில் 251 விவசாயிகள், நாட்றாம்பள்ளி வட்டத்தில் 119 விவசாயிகள், வாணியம்பாடி வட்டத்தில் 131 விவ சாயிகள், ஆம்பூர் வட்டத்தில் 84 விவசாயிகள் என மாவட்டம் முழுவதும் மொத்தம் 585 விவசாயி களுக்கு நேற்று நடைபெற்ற சிறப்பு முகாமில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in