சிவகங்கையில் காரில் தீ விபத்து :

சிவகங்கையில் காரில் தீ விபத்து :

Published on

சிவகங்கை செந்தமிழ்நகர் சிபியன் லேஅவுட் விநாயகர் தெருவைச் சேர்ந்தவர் கொங்கே ஸ்வரன். பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார்.

இவர், நேற்று முன் தினம் இரவு வீட்டின் முன் காரை நிறுத்தி வைத்துவிட்டு தூங்கச் சென்றார். இந்நிலையில் திடீரென கார் தீப்பிடித்து எரிந்தது. தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். இது தொடர்பாக சிவகங்கை நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in