விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் :

விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் :
Updated on
1 min read

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சி அலுவலகம் முன் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

100 நாள் வேலைத் திட்டத்தை நகராட்சி பகுதிக்கும் விரிவுபடுத்த வேண்டும். 58 வயதான விவசாய தொழிலாளர் அனைவருக்கும் மாத ஓய்வூதியம் வழங்கும் சட்டத்தை நிறைவேற்ற வேண் டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணைத் தலைவர் என்.மகேந்திரன் தலைமை வகித் தார். ஆர்ப்பாட்டத்தை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான வை.சிவபுண் ணியம் தொடங்கி வைத்தார். விவசாய தொழிலாளர் சங்க நகரத் தலைவர் எம்.செல்வராஜ், இந்திய கம்யூ. நகரச் செயலாளர் வீ.கலைச்செல்வன் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in