Published : 29 Jul 2021 03:15 AM
Last Updated : 29 Jul 2021 03:15 AM

பிளாஸ்டிக் குப்பைகளால் எட்டயபுரம் தெப்பம் மாசு :

எட்டயபுரம் சின்ன தெப்பக்குளத் தில் பிளாஸ்டிக் குப்பைகள் நிறைந்து, துர்நாற்றம் வீசுகிறது.

எட்டயபுரத்தில் நிலத்தடிநீரை பாதுகாக்கும் பொருட்டு 2 தெப்பங்கள், கண்மாய்கள் உள்ளன. நடுவிற்பட்டியில் உள்ள சின்னதெப்பக்குளத்துக்கு மழைக்காலத்தில் காற்றாற்று ஓடையில் இருந்துதண்ணீர் வரும். தெப்பக்குளத்தின் கரையில் தூண்கள், படித்துறைஆகியவை கலைநயமிக்க வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

தற்போது, காற்றாற்று ஓடையில்இருந்து வரும் நீர்வழித்தடம் ஆக்கிரமிப்புகளால் அடைக்கப்பட்டுவிட்டதால், மழை நீர் நேரடியாக தெப்பத்தில் விழுந்தால் மட்டுமே தண்ணீர் நிரம்பும் நிலை உள்ளது. அதே போல், மறுகால் செல்லும் வழியும் மாயமாகிவிட்டது. கடந்த ஜனவரி மாதம் பெய்த மழையில், சின்ன தெப்பம் நிரம்பியது.

ஆனால், அதில் ஏற்கெனவே, பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகள் கிடந்தன.இதில், மழைநீரும் சேர்ந்து தெப்பத்தில் தண்ணீர் பச்சை நிறமாக மாறியுள்ளது. துர்நாற்றம் வீசுகிறது. இரவு நேரங்களில் அப்பகுதியில் சமூக விரோத செயல்கள் நடப்பதாக அப்பகுதியினர் கவலை தெரிவிக்கின்றனர்.

எனவே, சின்ன தெப்பக்குளத்தில் உள்ள தண்ணீரை அகற்றி, குளத்தை ஆழப்படுத்த வேண்டும். நீர் வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, காற்றாற்று ஓடை நீர் வருவதற்கும், மறுகால் பாய்வதற்கும் வழிவகை செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x